;
Athirady Tamil News

குடைபிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடியவர் விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்!!

0

மழைக்கு குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடி சென்றவர் நிலைதடுமாறி மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மழை பெய்துகொண்டு இருந்ததால் , மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் , குடை பிடித்தவாறு பயணித்துள்ளார். அதன் போது ,திடீரென வீசிய காற்றினால் , குடையுடன் மோட்டார் சைக்கிளில் ஓட்டி , நிலை தடுமாறி எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானர்.

அதில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் , அவர்களுடன் மோதி விபத்துக்குள்ளானவருமாக மூவர் காயமடைந்த நிலையில் , சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.