;
Athirady Tamil News

ஆந்திராவில் 100 இடங்களில் திருடிய வாலிபர் கைது – 184 கிராம் நகைகள் பறிமுதல்…!!

0

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜிவாடா பகுதியை சேர்ந்தவர் நாகசாயி (வயது 30). சிறுவயதிலேயே இவரது பெற்றோர் இறந்து விட்டதால் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார்.

இந்த நிலையில் சித்தூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கடப்பா, கர்னூல், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் வீடுகளில் தொடர்ந்து கொலை சம்பவம் நடந்தது.

இது குறித்து ஏராளமான புகார்கள் போலீஸ் நிலையங்களில் குவிந்தன. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நெல்லூர் பஜார் பகுதியில் சுற்றித்திரிந்த நாகசாயியை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

முன்னுக்குப் பின் அவர் பேசியதால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில் நாகசாயி கடந்த 14 மாதத்தில், 6 மாவட்டங்களில், 100 இடங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரிடம் இருந்து 180 கிராம் தங்க நகைகள் 315 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.