;
Athirady Tamil News

ஐந்து மாவட்டங்களில் GMOA வேலைநிறுத்தத்தில்!!

0

ஐந்து மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் இன்று (20) காலை 8 மணி முதல் 24 மணிநேரம் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.

மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.