;
Athirady Tamil News

முச்சக்கரவண்டி மோதியதில் முதியவர் பலி!!

0

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாற்சந்தியை கடக்க இருந்த இரு சக்கர வாகனத்தின் ஓட்டுனரின் மீது வேகமாக வந்த முச்சக்கர வண்டி மோதியதில் மரணம் இடம்பெற்றதாக தலைமையகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் திருஞானசம்பந்தர் வீதியை உடைய வீரசிங்கம் இந்திரராஜ் (வயது 70) என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி ஓட்டுனரான (வயது 56) மகமாயபுரம், மட்கோ பிரதேசவாசியை கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.