;
Athirady Tamil News

தலவத்துகொட பிரதேசத்தில் திடீர் சோதனை நடவடிக்கை!!

0

தலங்கம பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினர் தலவத்துகொட பிரதேசத்தில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, 500,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 2 கிலோகிராம் 100 கிராம் கேரள கஞ்சா மற்றும் 10 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து இலத்திரனியல் தராசு மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தலவத்துகொட உத்துவான்கந்தவைச் சேர்ந்த ´படா´ என அழைக்கப்படும் அருண மற்றும் பத்தரமுல்லைச் சேர்ந்த ´ஹைஸ்பீட்´ என அழைக்கப்படும் பிரசன்ன என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.