;
Athirady Tamil News

வவுனியாவில் வர்த்தக நிலையம் முன்பாக முதியவரின் சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை!! (படங்கள்)

0

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் வாயிலில் முதியவர் ஒருவரின் சடலத்தினை இன்று (22.12) இரவு 8.00 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையத்திற்கு முன்பாக முதியவர் ஒருவர் எவ்வித அசைவுமின்றி மரணமடைந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் 1990 அவசர நோயாளர் காவு வண்டிக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.

அதன் பின்னர் 1990 அவசர நோயாளர் காவு மூலம் அவ்விடத்திற்கு விரைந்த வைத்திய குழாமினர் வயோதிபரின் உடல் நிலையினை பரிசோதனைக்குட்படுத்தியதுடன் அவரின் மரணத்தினை உறுதிப்படுத்தினர்.

குறித்த வயோதிபர் உடல் நல குறைவினால் மரணம் அடைந்தாரோ அல்லது யாரேனும் தாக்குதல் மேற்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த முதியவர் பழைய பேரூந்து நிலையத்தில் தினசரி நடமாடி திரிபவர் என பொதுமக்கள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.