;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் இன்று அடையாளம்!!

0

யாழ்ப்பாணத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு மலேரியாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

குறித்த நபர் யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 10 நாட்களில் இருவர் மலேரியா தொற்றாளர்களாக யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.