;
Athirady Tamil News

பாலியல் தொந்தரவின் உச்சம்… 8ம் வகுப்பு மாணவியை 8 முறை கத்தியால் குத்திய கொடூரம்…!!

0

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் கற்பழிக்க முயன்றுள்ளார். இதனை மாணவி தடுக்க முயற்சி செய்தபோது ஆத்திரமடைந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி உள்ளார்.

13 நொடிகளில் 8 முறை கத்தியால் குத்தியதால் அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவர் சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கத்தியால் குத்திய நபர் ஏற்கனவே பலமுறை அந்த மாணவியை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.