;
Athirady Tamil News

மரியாதையா அவன விட்டு விலகு… பாய் ஃபிரண்டுக்காக அடித்துக்கொண்ட பெண்கள்…!!

0

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு இளைஞருக்கு இரண்டு பெண்கள் நடுரோட்டில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெவ்வேறு பள்ளிகளில் பிளஸ்2 படிக்கும் மாணவிகள், ஒரே வாலிபரை காதலித்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், நடுரோட்டில் இருவரும் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். சுற்றி பொதுமக்கள் பலர் நிற்கிறார்கள் என்பதைக்கூட பொருட்படுத்தாமல் இருவரும் ஆக்ரோஷமாக மோதினர். பட்டப்பகலில் பாய் ஃபிரண்டுக்காக இப்படியா பண்ணுவாங்க என அங்கிருந்தவர்கள் திட்டித் தீர்த்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குடுமிப்பிடி சண்டையை விலக்கி, பெண்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பெற்றோரையும் வரவழைத்து பேசினர். பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அத்துடன், சம்பந்தப்பட்ட வாலிபரை அழைத்தும் விசாரணை நடத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.