;
Athirady Tamil News

இந்தியாவில் 140 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு…!!

0

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று 51 லட்சத்துக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

இதன்மூலம் இந்தியாவில் மொத்தம் 140.24 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.