;
Athirady Tamil News

வவுனியா நகரசபையில் தீப்பற்றிய குப்பையேற்றும் வாகனம் : சி.சி.ரி.வி உதவியுடன் விசாரணை முன்னெடுப்பு!! (படங்கள்)

0

வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பையேற்றும் வாகனம் இன்று (24.12.2021) அதிகாலை நேரத்தில் தீடிரேன தீப்பற்றியேறிந்துள்ளது. இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரின் கழிவுகளை நேற்று (23.12) இரவு ஏற்றிய பின்னர் நகரசபை வளாகத்தில் குப்பையேற்றும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் அதிகாலை 2.00 மணி வரை ஊழியர்கள் கடமையாற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நகரசபை ஊழியர் ஒருவர் காலை கடமைக்கு திரும்பிய சமயத்தில் குப்பையேற்றும் வாகனம் எரிந்து கொண்டிருந்தது. அதன் பின்னர் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் வாகனம் பகுதியளவில் மாத்திரமே சேதமடைந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சி.சி.ரி.வி உதவியுடன் தீ விபத்திற்கான காரணத்தினை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தீவிபத்து சம்பவம் குப்பையேற்றும் வாகனத்தில் காணப்பட்ட எதேனும் எரிபொருளால் உருவானதா? அல்லது யாரேனும் தீ வைத்துள்ளார்களா? என இரு கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.