;
Athirady Tamil News

கடற்தொழில் அமைச்சரை கண்டதும் நழுவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்! (படங்கள்)

0

கடற்தொழில் அமைச்சரை கண்டதும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் போராட்ட களத்தில் இருந்து நழுவி சென்றனர்.

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து , யாழ்.மாவட்ட மீனவர்களால் இன்றைய தினம் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடன் கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கெடுத்து இருந்தனர்.

அந்நிலையில் போராட்டம் இடம்பெற்ற யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்த போது , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் போராட்ட இடத்தில் இருந்து நழுவி சென்றனர்.

இதேவேளை கடற்தொழில் அமைச்சர் , தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினை பெற்று தருகிறேன் என மீனவர்களுக்கு அளித்த உறுதிமொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் ஏற்பாட்டில் முற்றுகை போராட்டம்!! (படங்கள் வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.