;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கு முற்பணம் வழங்க தீர்மானம்!!

0

அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்காக விசேட முற்பணம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4,000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முற்பணம் வழங்கும் நடவடிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி 28ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.