;
Athirady Tamil News

வரவு செலவு திட்டத்தில் எதிராக வாக்களித்தவர்கள் கூட மக்களுக்கான அபிவிருத்தி திட்டத்தில் எம்மோடு கை கோர்க்கிறார்கள்; திலீபன் எம்.பி!!

0

வரவு செலவு திட்டத்தில் சிகப்பு பட்டினை அழுத்தி எதிராக வாக்களித்தவர்கள் கூட இன்று எம்மோடு மக்களுக்கான அபிவிருத்தி திட்டத்தில் கை கோர்க்கிறார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவர்களின் ஒதுக்கீட்டில் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகள் 15 பேருக்கு தையல் இயந்திரமும், 25 பேருக்கு நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் பைப் உட்பட 18 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பயனாளிகளுக்கான உதவித் திட்டங்களை வழங்கி வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் கொண்டு வரப்பட்ட போது சிவப்பு பட்டினை அழுத்தி எதிராக வாக்களித்தவர்கள் கூட இன்று எம்மோடு மக்களுக்கான அபிவிருத்தி திட்டத்தில் கை கோர்க்கிறார்கள். அது உண்மையில் ஆரோக்கியமான விடயம். அது எதிர் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. எதிர்த்தவராக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களும் எம்மோடு இணைந்து மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு கைகொடுக்குமாறு நான் இவ் இடத்தில் அழைப்பு விடுகிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்சன, வவுனியா மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகளும், பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.