;
Athirady Tamil News

காதலி பேச மறுத்ததால் விபரீத முடிவு – கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை…!!

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கரியகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 49). ஆட்டோ டிரைவர். இவரது மகன் அஜய்(19). உடுமலை ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவரது மூலம் அஜய்க்கு, புளியம்பட்டியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த இளம்பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக அஜய்க்கு யாரோ கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண்ணிடம் கேட்டார். மேலும் வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல்களை அனுப்பி உரையாடல் நடந்தது. அதன்பின்னர் திடீரென அந்த இளம்பெண் பேச மறுத்து அவரது வாட்ஸ்-அப் எண்ணை ‘பிளாக்’ செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் புளியம்பட்டியில் உள்ள அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அங்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

அதன்பின்னர் அங்கிருந்து அஜய் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. சிறிது நேரம் கழித்து அவரது தந்தை வந்தார். அவர் கதவை தட்டி பார்த்தார். ஆனால் அஜய் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அங்கு வந்த அவரது நண்பர் ஒருவர் வீட்டின் பின்புறம் வழியாக சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றார். அப்போது அஜய் சேலையால் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.