;
Athirady Tamil News

கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!!

0

கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு இன்று (26) இரவு 9 மணி முதல் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, கோட்டே, கடுவெல, தெஹிவளை மற்றும் கல்கிசை நகர சபைக்குட்பட்ட பகுதி, மஹரகம , பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை நகர சபைக்குட்பட்ட பகுதி மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.