;
Athirady Tamil News

செல்பி எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி..!!

0

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜூ. அவருடைய மகன்கள் விக்னேஷ்(வயது29), யோகேஷ்(23). சென்னை திருவேற்காட்டை சேர்ந்த கோதண்டராமன் மகன் ஹரீஷ்(23), காரைக்காலை சேர்ந்த செல்லையா மகன் கணேஷ் (21). உறவினர்களான இவர்கள் 4 பேரும் பட்டதாரிகள் ஆவர்.

இந்தநிலையில் இவர்கள் கோவை, பழனிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் அவர்கள் கோவைக்கு சென்றனர். அங்குள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். பின்னர் ரெயில் மூலம் நேற்று பழனிக்கு வந்தனர்.

மதியம் 3 மணி அளவில் ஆட்டோ மூலம் பழனி அருகே, கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள வரதமாநதி அணைக்கு அவர்கள் சென்றனர்.

பின்னர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு அவர்கள் சென்றனர். அங்கு அவர்கள் 4 பேரும் அணையில் இறங்கி தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்தனர். அப்போது திடீரென்று கணேஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விக்னேசும், யோகேசும் அவரை காப்பாற்றுவதற்காக அணையின் ஆழமான பகுதிக்கு சென்று தேடினர்.

சிறிது நேரத்தில் அவர்களும் நீரில் மூழ்கினர். இதனால் செய்வதறியாது தவித்த ஹரீஷ் அணையின் கரை பகுதிக்கு ஓடிவந்து, காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று அபயகுரல் எழுப்பினார்.

சத்தம் கேட்டு அணை பகுதியில் இருந்த மீன்பிடி தொழிலாளர்கள் ஓடிவந்தனர். பின்னர் இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையம் மற்றும் ஆயக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அணையில் இறங்கி, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சில மணிநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். தண்ணீரில் மூழ்கிய அவர்கள் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.