;
Athirady Tamil News

வீட்டில் தூங்கி கொண்டு இருந்த 5 மாத குழந்தை கடத்தி கொலை..!!!

0

தானே மாவட்டம் கல்வா சாய்பாபா நகர் பைப்லைன் பகுதியை சேர்ந்தவர் சங்கர். தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மாத மகன் ஸ்ரீகாந்த் இருந்தான்.சம் பவத்தன்று வீட்டில் குழந்தை ஸ்ரீகாந்த் தூங்கி கொண்டிருந்தான். சாந்தி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் ஸ்ரீகாந்த் காணாமல் போய் இருந்தான். அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடிய போது எங்கும் கிடைக்காமல் போனதால் கல்வா போலீசில் சாந்தி புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன குழந்தை ஸ்ரீகாந்த் வீட்டருகே உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை யாரோ கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.