;
Athirady Tamil News

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு டெங்கு மரணம் – டெல்லி அரசு தகவல்…!!

0

டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 23 பேர் இந்த ஆண்டு டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஒருவர் மட்டுமே டெங்குவால் மரணம் அடைந்தனர். இந்த ஆண்டு டெங்கு மரணம் 23-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டு 1072-ஆக இருந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை இந்த ஆண்டு 9545-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெங்கு பாதிப்பும், மரணமும் அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.