;
Athirady Tamil News

5 ஆவது நாளாகவும் இலவசமாக பயணிக்கும் ரயில் பயணிகள்!!

0

புகையிரத சேவையாளர்கள் பதவி உயர்வு, புகையிதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு, உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிதுள்ள புகையிரத ஊழியர்கள் போராட்டத்தால் பொது மக்கள் ஐந்தாவது நாளாகவும் மலையக புகையிரத சேவைகளில் இலவசமாக பயணித்தனர்.

குறித்த போராட்டம் நடைபெற்ற போதிலும் புகையிரத பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் இன்று (28) புகையிரதத்தில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

மலையக புகையிரத நிலையங்களில் அதிகமான வற்றில் இன்று வருகை தந்த புகையிரத பயணிகளுக்கு புகையிரத கடவை சீட்டுக்கள் வழங்கப்படவில்லை மக்கள் இலவசமாகவே பயணித்தனர்.

இன்று நாடு முகம்கொடுத்துள்ள நிலையில் டிக்கட் இன்றி பயணஞ் செய்தால் மேலும் மேலும் நாடு பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் என இன்னும் ஒரு சிலர் தெரிவித்தனர்..

எது எவ்வாறான போதிலும் முன்கூட்டிய டிக்கட் பதிவு செய்தவர்களும், புகையிரத பயணஞ் சீட்டிக்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொண்டவர்களும் வழமை போல் தங்களது பயணங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வருடத்தின் மாத இறுதியாக காணப்படுவதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விடுமுறைக்காக புகையிரதங்களில் பயணிப்பதனை காணக்கூடியதாக இருந்தது. இதனால் மலையக புகையிரத நிலையங்களில் வழமைக்கு மாறாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.