;
Athirady Tamil News

பாம்பு தீண்டியதில் அனலைதீவு வாசி உயிரிழப்பு!!

0

பாம்பு தீண்டியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளார்.

அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தொியாத வகை பாம்பு ஒன்று அவரை தீண்டியது. அதற்கு சிகிச்சை பெற்று மறுநாள் அவர் வீடு திரும்பியிருந்தார். எனினும் கடந்த 26ம் திகதி அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.