;
Athirady Tamil News

சரத்பவார் மகள் மற்றும் மருமகனுக்கு கொரோனா…!!

0

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதற்கிடையே, நேற்று மேலும் 85 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு ஒமைக்ரான் பாதிப்பு 252 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றும் அதிகரித்து வருகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே (52). இவர் மகாராஷ்டிர மாநிலம் பாராமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யாவார்.

இந்நிலையில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கும் அவரது மருமகன் சதானந்தாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சுப்ரியா சுலே வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சதானந்திற்கும் எனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் எதுவும் இல்லை. எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கவனமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.