;
Athirady Tamil News

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: மோடியின் துபாய் பயணம் தள்ளிவைப்பு…!!

0

இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் எட்டப்பட்டு உள்ளன. இதை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜனவரி) தொடக்கத்தில் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது இந்த பயணத்தில் துபாய் கண்காட்சியை பார்வையிடுவதுடன், அங்கு வாழும் இந்தியர்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ஏற்பாடுகள் நடந்து வந்தன.

ஆனால் இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்து வருகிறது. இதை கட்டுப்படுத்த சர்வதேச சமூகம் தீவிரமாக போராடி வருகிறது. இந்த ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் அமீரக பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.