;
Athirady Tamil News

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை!! (படங்கள், வீடியோ)

0

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி ஆஸ்பத்திரி வீதியூடாக பலாலி வீதி மற்றும் ஸ்டான்லி வீதிக்கு சென்று அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர வீதி ஊடாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுகாதார துறையை அழிக்காதே, சுகாதார நிர்வாக சேவையை ஆரம்பி,விசேட கொடுப்பனவை உயர்த்து, பொது மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடு, பதவி உயர்வு முரண்பாட்டை தீர்த்து வை, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கு. போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.

போராட்டம் காரணமாக யாழ் நகரப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை சீர் செய்வதற்காக பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.