;
Athirady Tamil News

சிறுமிகளை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…!!

0

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பெத்த பாடு பகுதியை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 11 மற்றும் 9 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

கணவர் இறந்து விட்டதால் தனது தாய் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் தன்னுடைய 2 மகள்களையும் தாய் வீட்டில் விட்டுவிட்டு ஹைதராபாத்தில் வேலைக்கு சென்றார்.

அதே பகுதியை சேர்ந்தவர் இளம்பெண்ணின் உறவினர் பவன்குமார் (வயது 30). சிறுமிகள் 2 பேரும் பவன்குமார் உறவினர் என்பதால் அவருடன் நட்பாக பழகி வந்தனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பவன்குமார் சிறுமிகளிடம் நைசாக பேசி அவர்களை கடந்த 5 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிகள் இருவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிறுமியின் பாட்டி அவர்களை சிகிச்சைக்காக டாக்டரிடம் அழைத்து சென்றார். சிறுமிகளை பரிசோதித்த டாக்டர் 2 பேரும் கர்ப்பமாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிறுமியின் பாட்டியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மூதாட்டி பெத்தபாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பவன் குமாரை போக்சோவில் கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.