;
Athirady Tamil News

காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் காணாமற்போயுள்ளார்!!

0

காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார்.

இன்று மாலை 3.30 மணியளவில் இளைஞன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களினால் தேடப்பட்டுகிறார்.

கோண்டாவிலைச் சேர்ந்த லோகீஸ்வரன் (வயது-17) என்ற மாணவனே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

கோண்டாவிலிருந்து 20 பேர் காரைநகர் கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் ஒருவர் மீண்டு வந்த நிலையில் மற்றயைவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.