;
Athirady Tamil News

மும்பையில் 500 சதுர அடி வரை பரப்புள்ள வீடுகளுக்கு சொத்து வரி தள்ளுபடி- மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு…!!!!

0

மும்பையில் 500 சதுர அடி வரை பரப்புள்ள வீடுகளுக்கு சொத்து வரியை தள்ளுபடி செய்வதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

சொத்து வரியை ரத்து செய்வதன் மூலம் 16 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என கூறிய அவர், இந்த அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நகர வளர்ச்சித் துறை மந்திரி ஏக்நாத் சிண்டேவுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆண்டு மும்பை மாநகராட்சித் தேர்தல் வருவதை முன்னிட்டு புத்தாண்டுப் பரிசாக சொத்து வரியை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் மும்பை மாநகராட்சிக்கு 468 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.