;
Athirady Tamil News

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடித்த ஜாக்பாட்- இன்ப அதிர்ச்சியில் தமிழக இளைஞர்..!!!

0

ஐக்கிய அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகர் என்பவருக்கு அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் ஒரு கோடி திர்காம் பரிசு கிடைத்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20 கோடி ஆகும்.

தினகர் முதல் முறையாக கடந்த 25ம் தேதி ஆன்லைனில் லாட்டரி வாங்கி உள்ளார். அந்த லாட்டரிக்கு பரிசு கிடைத்துள்ளது.

முதல் லாட்டரியிலேயே 20 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருப்பது தனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்றும், இந்த பரிசுத் தொகையை வைத்து தனது கிராமத்தில் விவசாய நிலம் வாங்க உள்ளததாகவும் அங்குள்ள பள்ளிக்கு உதவ உள்ளதாகவும் தினகர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.