;
Athirady Tamil News

அணுசக்தி நிலையங்களின் பட்டியலை பகிர்ந்துகொண்ட இந்தியா – பாகிஸ்தான் தூதரகங்கள்…!!!

0

இந்தியா – பாகிஸ்தான், இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களின் வழியே இரு நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை பகிர்ந்துகொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான தாக்குதலை தடை செய்வது தொடர்பாக இந்தியாவும்-பாகிஸ்தானும் ஒப்பந்தம் செய்துள்ளன. 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கையெழுத்திடப்பட்டு, 1991-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் தாங்கள் நிறுவியுள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் தேதியில் பகிர்ந்து வருகின்றன. இதன்படி இந்த வருடம் 31-வது பட்டியல் பரிமாற்றம் நடைபெற்றது.

இதேபோல, 2008-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி பாகிஸ்தான் – இந்தியா இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான தூதரக ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் தங்கள் நாட்டு காவலில் வைத்துள்ள மற்றொரு நாட்டு கைதிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி மற்றும் ஜூலை 1-ம் தேதி பரிமாறிக்கொள்ளும்.

இதன்படி, பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 628 கைதிகள் அந்நாட்டு சிறையில் உள்ளதாகவும், இதில் 51 பொதுமக்களும், 577 மீனவர்களும் அடங்குவர் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்தியாவில் உள்ள 355 பாகிஸ்தானிய கைதிகளில் 282 பொதுமக்களும், 73 மீனவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைதிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.