;
Athirady Tamil News

மீன் பிடிக்க சென்றவர் முதலைக்கு இறையான சோகம்!!

0

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01) முதலை இழுத்துச் சென்ற கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டானை திருக்கோவில் 4 பிரிவைச் சேர்ந்த 55 வயதுடைய இராசநாயகம் விநாயகமூர்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த ஆற்றில் வழமைபோல சம்பவதினமான நேற்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆற்றில் இருந்த முதலை அவரை பிடித்து கடித்து நீரினில் இழுத்துச் சென்று கடித்து குதறியதையடுத்து அவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.