;
Athirady Tamil News

4 வயது சிறுமியை கடித்து குதறும் தெரு நாய்கள்- பதற வைக்கும் வீடியோ

0

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 4 வயது சிறுமியை தெருநாய்கள் சில துரத்தி, துரத்தி கடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபாலில் கூலி தொழிலாளி ஒருவரின் 4 வயது மகள் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரை துரத்திய தெரு நாய்கள் சிறுமி கீழே விழுந்தவுடன், தலை, வயிறு, கால் என அனைத்து இடத்திலும் கடித்தன. சிறுமி வலியால் துடித்தபடி கதறினார்.

சிறிது நேரத்தில் அந்த பக்கம் வந்த ஒருவர் தெரு நாய்களை துரத்திவிட்டு சிறுமியை காப்பாற்றினார். இந்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

— Anurag Dwary (@Anurag_Dwary) January 2, 2022
போபாலில் ஒரு லட்சம் தெரு நாய்கள் வரை இருப்பதாகவும், இந்த தெரு நாய்கள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.