;
Athirady Tamil News

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை!!

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(08.01.2022) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.

இதன்படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.ஏழாலை, தோப்பு- ஏழாலை, குப்பிழான், மயிலங்காடு, சூராவத்தை, கட்டுவன்புலம், சுன்னாகம், சுன்னாகம் டெலிகொம், புகையிரதநிலைய வீதி மணியம் கடையடி, கொழும்புத்துறை, மணியந் தோட்டம், பழைய பூங்கா வீதி, பாசையூர், பெரிய கோவில், புங்கங்குளம், உதயபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.