;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2 டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா…!!

0

உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1.6 டன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், ஜனவரி 1ம் தேதி 5 லட்சம் டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது கட்டமாக 2 டன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளன. காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் இந்த பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரும் வாரங்களில் கூடுதல் உதவிப்பொருட்கள், மருந்துகள், உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.