;
Athirady Tamil News

வவுனியாவில் சமூக சேவையாளர் கதிர்காமராஜாவுக்கு அஞ்சலி!!! (படங்கள்)

0

பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் முன்னாள் தலைவரும் சமூகசேவையாளருமான மா. கதிர்காமராஜாவின் ஆத்மாசாந்தி பிரார்த்தனை நிகழ்வு வவுனியாவில் இன்று மாலை (09) நடைபெற்றது.
வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சிமன்றம் மற்றும் எம்.ஜி.ஆர் நற்பணிமன்றங்களின் ஏற்பாட்டில் கோ.சிறிஸ்கந்தராஜா தலைமையில் குறித்த நிகழ்வு வவுனியா வாடிவீட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சமூக சேவையாளர் கதிர்காமராஜா தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம், சிரேஸ்ட சட்டத்தரணி க.தயாபரன், செ.சபாநாதன், க.கிருபாகரன், வவுனியா நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி, தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் த.யோகராஜா, சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இஸ்லாமிய வர்த்தக பிரமுகர்கள் சமூக சேவையாளரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.