;
Athirady Tamil News

துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம் !!

0

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹிந்த அபேகுணவர்த்தன கூறினார்.

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான துறைமுகங்களின் தரவரிசை பட்டியில் இலங்கை 23 ஆவது இடத்தில் உள்ளது.

2035 ஆம் ஆண்டை அடையும் போது கொழும்பு துறைமுகத்தை ஏராளமான கொள்கலன்களை கையாளும் பிரபல்யமான துறைமுகமாக மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ரோஹிந்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.