சர்வோதயத்தால் இளைஞர் தொழில்முனைவோர் திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தெரிவுசெய்யப்பட்ட பங்காளிகளுக்கான தருணோதய இளைஞர் தொழில்முனைவோர் திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று 12.01.2022 சர்வோதய தலமையகத்தில் நடைபெற்றது.
சர்வோதய அமைப்பின் கௌரவ தலைவர் வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி சாமிந்த ராஜகருணா தருனோதய திட்ட குழு மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர். சர்வோதய நிறுவனம் தொடர்ச்சியாக நாட்டின் இளைஞர்களுக்கு தொழில் மற்றும் தொழில் முயற்சிகளுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.