;
Athirady Tamil News

5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில்!!

0

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் இன்று (13) உத்தரவிட்டார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹேரொயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக திருகோணமலை போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்தமை, விற்பனை செய்தமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐந்து தடவைக்கு மேல் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.