;
Athirady Tamil News

பாதுகாப்பு செயலாளர் வழங்கியுள்ள உறுதி!!

0

பொரளையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகி 24 மணித்தியாலங்கள் கடப்பதற்குள் பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பில் விமர்சிப்பது நியாயமில்லை என ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நாட்டு மக்களுக்கு உறுதியளிப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (15) காலை மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.