;
Athirady Tamil News

நாளை சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தைப்பூச பெருவிழா (படங்கள்)

0

நாளை சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தைப்பூச பெருவிழா (படங்கள்)

சுவிஸ் பேர்ண் ஶ்ரீகல்யாண சுப்ரமணியர் ஆலய தைப்பூச பெருவிழா நாளை 18.01.2022 காலை 08:00 மணிக்கு ஆரம்பமாகி மூலமூர்த்தி முருகப்பெருமானுக்கு 1008 சங்குளால் சங்காபிஷேகமும், ஶ்ரீ கல்யாண சுப்ரமணியருக்கு 108 சங்குகளால் சங்காபிஷேகமும், 108 குடபால் அபிஷேகமும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகமும் இடம் பெற்று 11:00 மணிக்கு விநாயர் பூசையுடன் ஆரம்பமாகி நடைபெற உள்ளது.

மீண்டும் மாலை பூசை இடம்பெற்று ஐரோப்பிய நாட்டில் பேர்ண் முருகன் ஆலயத்தில் வள்ளி தெய்வானை சகிதம் முருகப்பெருமான் தேரில் உள்வீதி வலம்வரும் காட்சியும் இடம் பெற உள்ளது.

தவில் நாதஸ்வர கலைஞர்களாம் சூரிச் பாலச்சந்திரன் குழுவினரின் கச்சேரியும் இடம்பெற உள்ளது என கோயில் நிர்வாகத்தினர் அறிய தருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.