;
Athirady Tamil News

கடந்த வார இறுதியில் பயணங்களில் ஈடுபட்டவர்களுக்கான விஷேட அறிவிப்பு!!

0

கொவிட் நோயாளர்களுக்கான ஒட்சிசன் தேவையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை சுகாதார அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அது மேலும் வளர்ச்சியடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதேவேளை, கடந்த வார இறுதியில் பயணங்கள் மற்றும் ஒன்றுகூடல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காய்ச்சல் அல்லது சுவாசிப்பதில் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.