;
Athirady Tamil News

திருச்சூரில் போதை மருந்து பயன்படுத்திய பயிற்சி டாக்டர் கைது…!!

0

கேரளாவின் திருச்சூர் பகுதியில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சூர் மருத்துவ கல்லூரி பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் போதை பொருள்பயன்பாடு இருப்பது தெரியவந்தது.

போலீசார் நேற்று அங்குள்ள மாணவர் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விடுதியில் இருந்த பயிற்சி டாக்டர் அகில் முகமது உசேன் என்பவரிடம் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதை பொருட்களை அவர் ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். மேலும் அங்கு 15 பேர் வரை போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களையும் பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.