;
Athirady Tamil News

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

0

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளுக்கும் தற்போது கொரோனா பரவியுள்ளது. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே 2 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தற்போது குணம் அடைந்துவிட்டனர்.

இந்த நிலையில் மேலும் 8 நீதிபதிகளுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 1,500 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 400 பேருக்கு கொரோனாவின் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள மருத்துவ சேவை மையத்திலும் 5 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.