;
Athirady Tamil News

ஜே.வி.பி பேரணி மீது முட்டை வீச்சு !!

0

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனால், ​கோட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மருதானை தொழிற்நுட்ப சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாக வந்தது.

அந்த ஆர்ப்பாட்ட பேரணி, மத்திய பஸ் நிலையத்துக்கு அண்மையில் பயணித்துக்கொண்டிருந்த போது, பேரணியின் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை பேரணியில் பங்கேற்றவர்கள் உறுதிப்படுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.