;
Athirady Tamil News

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் படகு கடலில் மூழ்கியது!! (படங்கள், வீடியோ)

0

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் பகுதி மீனவரின் படகு கடலில் மூழ்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக 7 மீனவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை மீன்வளத் துறை அதிகாரியிடம் பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை ரோந்து கப்பல் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த வஸ்தியான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேருக்கு நேர் மோதி தாக கூறப்படுகிறது.

இதனால் இலங்கை கடற்படை மோதியதில் விசைப்படகில் இருந்த 7 மீனவர்கள் கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசைப்படகு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 7 மீனவர்களை காப்பாற்றியுள்ளது

இதனால் ஜெயபாலன், சுரேந்திரன், ஆகாஸ், டைட்டஸ், சேதுராமன், டேனியல், புதில் மென் உள்ளிட்ட 7 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து கரை வந்து உள்ளனர்

தொடர்ச்சியாக இலங்கை கடற்படை கப்பல் மோதி விசைப்படகு மூழ்கடிப்பது, மீனவர்கள் சிறை பிடிப்பது நடைபெற்று வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

மேலும் மத்திய மாநில அரசுகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்டு கொடுப்பதோடு இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.