;
Athirady Tamil News

ஒருபக்க காதல் – உறவினர்கள் மீது வாள் வெட்டு…7 பேர் கைது!!

0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள், கத்தியுடன் நேற்று (19) இரவு கைது செய்துள்ளதாக தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பெண் ஒருவரை இளைஞன் ஒருவர் ஒருபக்கமாக காதலித்து வந்துள்ளதாகவும் அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் அவரை இளைஞன் பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பெண்ணின் உறவினருக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து கடந்த 9ம் திகதி குறித்த பெண்ணை காதலித்து வரும் இளைஞன் அவரது குழுவினருடன் பெண்ணின் உறவினர்கள் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருந்த 7 பேரை நேற்று இரவு பொலிசார் கைது செய்ததுடன் அவர்களிமிருந்து வாள் மற்றும் கத்திகளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.