;
Athirady Tamil News

இன்றும் நாட்டின் சில பகுதியில் மின் வெட்டு!!

0

டீசல் நிறைவடைந்ததன் காரணமாக முற்றாக செயலிழந்திருந்த களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தின் மொத்த கொள்ளளவான 270 மெகாவாட்டில் 195 மெகாவோட்களை தேசிய மின் கட்டமைப்புக்கு இன்று (20) பிற்பகல் மீண்டும் சேர்க்க முடிந்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்தபடி இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த காரணத்தால் இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்த போதிலும் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.