;
Athirady Tamil News

வருங்கால வைப்பு நிதியில் கூடுதலாக இணைந்த 14 லட்சம் பேர்…!!

0

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த நவம்பர் மாதத்தில் 13 லட்சத்து 95 ஆயிரம் சந்தாதாரர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2 லட்சத்து 85 ஆயிரம் அதிகம். அதேபோல, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 3 லட்சத்து 84 ஆயிரம் அதிகம்.

சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதால், பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகி இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், இவர்களில் 5 லட்சத்து 67 ஆயிரம் பேர், வேலை இழந்து, வேறு வேலையில் சேர்ந்து மீண்டும் வைப்புநிதி அமைப்பில் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் சேர்ந்தவர்களில் 60.60 சதவீதம்பேர் (8.46 லட்ச சந்தாதாரர்கள்), தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.