;
Athirady Tamil News

எச்சரிக்கை – மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு!!

0

2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேலதிகமாக அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக இந்த பிரிவின் வைத்தியர் இந்திக வீரசிங்க தெரிவிக்கையில், படிப்படியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக வைத்தியர் இந்திக வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.