;
Athirady Tamil News

தைவானுக்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தல்…!!

0

தைவானை சொந்தம் கொண்டாடி வரும் சீனா அந்த நாட்டை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி வருகிறது. மேலும் தென் சீன கடல் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. பயிற்சியில் ஈடுபடுவதற்காக யு.எஸ்.எஸ்.கார்ல் வின்சன், யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் ஆகிய 2 அமெரிக்க கப்பல்கள் தென் சீன கடலுக்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.