;
Athirady Tamil News

மற்றுமொரு மின் உற்பத்தி நிலையத்திற்கு பூட்டு!

0

கெலனிதிஸ்ஸ Sojitz தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால் சுமார் 160 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு இழப்பு ஏற்படுவதாக சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக குறித்த மின் நிலையத்தை மூட இடமளிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் குழு இன்று குறித்த மின் உற்பத்தி நிலையத்திற்கு சென்று ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் போதுமானதாக உள்ளதால், நாளை வரை மின்சாரத்தை துண்டிக்கக்கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

நாளைய தினத்தின் பின்னர் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானமொன்று எடுக்கப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.